அத்தியாயம் 23 நேற்றைக்கு முந்தைய நாள்! ஹரிஷ் அவன் வீட்டிலிருந்து அதிக தொலைவிலிருந்த ஜிம் ஒன்றின் வெளியே தனது மகிழ்வுந்தில் அமர்ந்திருந்தான். அருகே இருபத்தாறு வயதில் வாட்டசாட்டமான உடலமைப்புடன் காவல்துறையைச் சேர்ந்த ஒருவன்! இப்போதுதான் உடற்பயிற்சியை முடித்துவிட்டு வந்திருக்கிறான் என்று, முகம் கழுவியதில் காயாமல் ஆங்காங்கே ஒட்டியிருந்த நீர்த்துளிகளில் தெரிந்தது. ஜன்னலில் தன் பரந்த முதுகைச் சாய்த்து முழங்கையை இருக்கைப் பகுதியில் பதித்திருந்தவன் சொன்னான். “இந்த ரோலர் பொட்டட்டோக்காகவே செஞ்சு வந்த பிரச்சினை மாதிரி இருக்குது.” அம்ருவை, ‘ரோலர் பொட்டட்டோ’ என்ற அடைமொழியுடன் பேசும் இவனை நாம் முன்பே பார்த்திருக்கிறோம். அவளிடம், ‘கல்யாணம் செஞ்சுக்கலாமா?’ என்று கேட்டு வம்பிழுக்கும் அவளின் அத்தை மகன் தேவா. அஸ்வத் பார்த்த இரு முறையும் இவன் அங்ஙனமே பேசி வைத்ததில் அது உண்மையென்று நினைத்து, இவனைத்தான் அம்ருதா திருமணம் செய்ய போகிறாள் என்று நம்பிக் கொண்டிருக்கிறான் அஸ்வத். அம்ருதா அண்ணனிடம் அஸ்வத்தைப் பற்றிய அனைத்து விடயங்களையும் தெரிவித்த பின்னர்...
கதையின் இணைப்புகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன🎉 கதை முன்னோட்டம் ஹிக்கின் பாதம்ஸை அலசி விட்டு, ஐபாகோவில் ஐக்கியமாகி, பின்னர் ஊருக்கு செல்லப் பெட்டியைக் கட்டினார்கள். மகிழுந்தில் ஸ்வேதாவை முன்னே ஹரிஷின் அருகே ஏறிக்கொள்ள சொன்ன அம்ருவை மறுத்தவள் ஹரிஷைப் பார்த்தாள். ‘உங்கள் பாடு! எனக்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை.’ என்பதாக ஓர் சிரிப்புடன் அமைதியாக இருந்துக்கொண்டான் அவன். அம்ருவை பின்னால் தனியே விட்டுவிட்டு, தான் மட்டும் அவனருகே அமர்வது அதிகப்படியாக தெரிந்ததால், “நானும் பின்னாடி உன் கூடவே உட்காருறேன் அம்ரு.” என்று பின்னால் அமர்ந்துவிட்டு ஹரிஷைப் பார்க்க, அவள் பார்வைக்காகவே காத்திருந்தாற் போல் ஒற்றைக் கண் சிமிட்டி அவளைச் சிவக்க வைத்துவிட்டு மகிழுந்தை எடுத்தான். ஸ்வேதா ஓசூர் அருகே இருக்கும் கிருஷ்ணகிரியில் உள்ள அனுமன் தீர்த்தம் செல்ல வேண்டும் என்று விரும்பியதால், விரைவாகக் கோவில் சென்று அனுமனைத் தரிசித்தனர். அம்ரு ஏனோ சொல்ல தெரியாத உணர்வில் அந்த அஞ்சுதனைப் பார்த்திருந்தாள். “அம்ரு, கிளம்பலாம் டைமாச்சு!” என்ற ஹரிஷ் ஸ்வேதாவின் காதில் கிசுகிசுத்தான். “நான் அனுமன் பக்தனில்ல பேபி? இ...