அத்தியாயம் 34.1 சாஷ்டாங்கமாக தன் மனைவியின் காலில் விழுந்திருந்தான் ஹரிஷ். ‘அய்யய்யோ… என்னங்க நீங்க போய் என் கால்ல விழுந்துக்கிட்டு…’ என்றெல்லாம் ஸ்வேதா கிரிஞ்ச் நாடகம் போடவில்லை. மாறாக டிபிகல் மனைவியாக அவன் சிண்டைப் பிடித்தாள். “மனசுல இருக்கறதுதானே கோவத்துல வெளியே வரும்? இத்தனை நாளும் என்னைப் பத்தி இப்டியொரு மோசமான தாட்’அ மனசுல வச்சுக்கிட்டு தான் என் கூட பேசி, சிரிச்சு இருந்திருக்கீங்க. ஒரு சைக்யார்டிஸ்டா அதையும் எனக்குத் தெரியாம பார்த்துக்கிட்டு எவ்ளோ அழகா நடிச்சிருக்கீங்க?” “பேபி, இப்டிலாம் பேசாதேயேன்… சத்தியமா நான் உன்னை அப்டி நினைக்கலடீ.” “பொய்! இல்லன்னா எப்டி அப்டியொரு வார்த்தை வரும்? நான் உங்க தங்கச்சியைத் தாட்டிவிட நினைக்கறேன்னு…” என்றவளுக்கு அழுகை வந்துவிட, “ப்ச் அழாதே பேபி!” என்று அணைக்க வந்தவனின் கையைத் தட்டிவிட்டாள். “தெரியாம சொல்லிட்டேன்டி… நிஜமா மனசுல இருந்து சொல்லல! அவன் மேல இருக்க கோவத்துல தான்…” “கோவத்துல தான் மனசுல இருக்கறது வெளியே வரும். இவ யாரு நம்ம தங்கச்சி விஷயத்துல தலையிடன்ற நினைப்புதானே?” என்று முதலிலிருந்து ஆரம்பித்து தன் அழுகையைத் தொடர்ந்தாள். சோலி முடிஞ்...
கதையின் இணைப்புகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன🎉 கதை முன்னோட்டம் ஹிக்கின் பாதம்ஸை அலசி விட்டு, ஐபாகோவில் ஐக்கியமாகி, பின்னர் ஊருக்கு செல்லப் பெட்டியைக் கட்டினார்கள். மகிழுந்தில் ஸ்வேதாவை முன்னே ஹரிஷின் அருகே ஏறிக்கொள்ள சொன்ன அம்ருவை மறுத்தவள் ஹரிஷைப் பார்த்தாள். ‘உங்கள் பாடு! எனக்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை.’ என்பதாக ஓர் சிரிப்புடன் அமைதியாக இருந்துக்கொண்டான் அவன். அம்ருவை பின்னால் தனியே விட்டுவிட்டு, தான் மட்டும் அவனருகே அமர்வது அதிகப்படியாக தெரிந்ததால், “நானும் பின்னாடி உன் கூடவே உட்காருறேன் அம்ரு.” என்று பின்னால் அமர்ந்துவிட்டு ஹரிஷைப் பார்க்க, அவள் பார்வைக்காகவே காத்திருந்தாற் போல் ஒற்றைக் கண் சிமிட்டி அவளைச் சிவக்க வைத்துவிட்டு மகிழுந்தை எடுத்தான். ஸ்வேதா ஓசூர் அருகே இருக்கும் கிருஷ்ணகிரியில் உள்ள அனுமன் தீர்த்தம் செல்ல வேண்டும் என்று விரும்பியதால், விரைவாகக் கோவில் சென்று அனுமனைத் தரிசித்தனர். அம்ரு ஏனோ சொல்ல தெரியாத உணர்வில் அந்த அஞ்சுதனைப் பார்த்திருந்தாள். “அம்ரு, கிளம்பலாம் டைமாச்சு!” என்ற ஹரிஷ் ஸ்வேதாவின் காதில் கிசுகிசுத்தான். “நான் அனுமன் பக்தனில்ல பேபி? இ...