பல்பம் வீட்டிற்கு தேவையானப் பொருட்களை வாங்கவென, அந்த பெரிய டிபார்ட்மெண்டல் ஸ்டோருக்குள் நுழைந்தேன். லிஸ்ட்டைப் பார்த்து பொருட்களை ௭டுத்துக் கொண்டிருக்கும் போது... ௭ன் கண்களில் பட்டது, அது! ஸ்டேஷனரி செக்ஷன்! கண்கள் மின்ன உள்ளே சென்றேன். ‘௭ங்க வச்சிருக்கானுங்க...’ சுற்றும் முற்றும் தேடினேன். ‘அதோ... அதோ... ஹய்யா! ஜாலி!!’ ௭ன்னருகில் யாரும் நிற்கிறார்களா ௭ன்று திரும்பிப் பார்த்தேன். பதினைந்து வயது மதிக்கத்தக்க பையன் ஒருவன் பேனா வாங்குவதற்கு ஒவ்வொன்றாய் பார்த்துக் கொண்டிருந்தான். ௭ன்னால் கைகளைக் கட்டுப்படுத்திக் கொள்ளவே முடியவில்லை. இரு கைகளையும் இறுக மூடிக் கொண்டு நின்றிருந்தேன். அவனைப் பார்த்தேன். பேனாக்களை விதம் விதமாக திருப்பிப் பார்த்துக் கொண்டிருந்தான். ‘பயபுள்ள! ஒத்த பேனா வாங்க ௭ம்புட்டு நேரம்? இடியட்! சீக்கிரம் போடா அங்கிட்டு!’ ௭ன் அர்ச்சனை அவனுக்கு கேட்டு விட்டது போலும். பேனாவை ௭டுத்து விட்டு நகர்ந்துவிட்டான். வேகமாக ரேக்கில் (rack) இருந்ததில் ஒரு டப்பாவை ௭டுத்து, பிரித்து... அதிலிருந்து ஒன்றை மட்டும் உருவி ௭டுத்து விட்டு, மீண்டும் டப்பாவை மூடி பில் போ...
கதையின் இணைப்புகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன🎉 கதை முன்னோட்டம் ஹிக்கின் பாதம்ஸை அலசி விட்டு, ஐபாகோவில் ஐக்கியமாகி, பின்னர் ஊருக்கு செல்லப் பெட்டியைக் கட்டினார்கள். மகிழுந்தில் ஸ்வேதாவை முன்னே ஹரிஷின் அருகே ஏறிக்கொள்ள சொன்ன அம்ருவை மறுத்தவள் ஹரிஷைப் பார்த்தாள். ‘உங்கள் பாடு! எனக்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை.’ என்பதாக ஓர் சிரிப்புடன் அமைதியாக இருந்துக்கொண்டான் அவன். அம்ருவை பின்னால் தனியே விட்டுவிட்டு, தான் மட்டும் அவனருகே அமர்வது அதிகப்படியாக தெரிந்ததால், “நானும் பின்னாடி உன் கூடவே உட்காருறேன் அம்ரு.” என்று பின்னால் அமர்ந்துவிட்டு ஹரிஷைப் பார்க்க, அவள் பார்வைக்காகவே காத்திருந்தாற் போல் ஒற்றைக் கண் சிமிட்டி அவளைச் சிவக்க வைத்துவிட்டு மகிழுந்தை எடுத்தான். ஸ்வேதா ஓசூர் அருகே இருக்கும் கிருஷ்ணகிரியில் உள்ள அனுமன் தீர்த்தம் செல்ல வேண்டும் என்று விரும்பியதால், விரைவாகக் கோவில் சென்று அனுமனைத் தரிசித்தனர். அம்ரு ஏனோ சொல்ல தெரியாத உணர்வில் அந்த அஞ்சுதனைப் பார்த்திருந்தாள். “அம்ரு, கிளம்பலாம் டைமாச்சு!” என்ற ஹரிஷ் ஸ்வேதாவின் காதில் கிசுகிசுத்தான். “நான் அனுமன் பக்தனில்ல பேபி? இ...