அத்தியாயம் 2 ப்ரித்வியின் முகத்தில் வியர்வைத் துளிகள் மினுமினுத்தன. தாங்கவியலா அழுத்தத்தில் தொண்டைக்குழி ஏறி இறங்கியது. தலையை அழுந்தக் கோதியபடி கண்கள் மூடி அமர்ந்துவிட்டான். மியாவைப் போல் யமுனாவும் திருமணமே வேண்டாம் என்று இருக்கிறாள் போலும் என்றே நினைத்திருந்தான் ப்ரித்வி. தன்னிடம் குறை என்று எதுவுமில்லை. ஆக இத்தனை வருடங்கள் கழித்து திருமணத்திற்கு சம்மதித்திருக்கும் மியாவைப் போல் யமுனாவும் மனம் மாறிவிடுவாள் என்று கணித்துவிட்டான். "ப்ரித்வி! ப்ரித்வி! என்னடா பண்ணுது?" மாரடைப்பு வந்தவன் போல் அமர்ந்திருந்தவனை உலுக்கினாள் மியா. யமுனாவிற்கு இன்னமும் திருமணமாகவில்லை என்று இவன் உள்மனம் எப்படி அத்தனை நிச்சயமாய் நம்பியது? அதனாலல்லவோ அவளிடம் தன் காதலை வெளிப்படுத்தியிருந்தான்! "டேய் ப்ரித்வி!" "யாரு அவரு?" "நீ வீட்டுக்கு வா! நான் எல்லாம் சொல்றேன்." "பேரென்ன?" "ப்ச் ப்ரித்வி!" "மிஸஸ் யமுனா..?" 'பெயரை முழுமையாக்கு' என்று அடத்துடன் பார்த்தான். சொல்லாமல் இடத்தை விட்டு நகர மாட்டானென புரிந்த மியா சொன்னாள். "யமுனா ராஜீவ...
கதையின் இணைப்புகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன🎉 கதை முன்னோட்டம் ஹிக்கின் பாதம்ஸை அலசி விட்டு, ஐபாகோவில் ஐக்கியமாகி, பின்னர் ஊருக்கு செல்லப் பெட்டியைக் கட்டினார்கள். மகிழுந்தில் ஸ்வேதாவை முன்னே ஹரிஷின் அருகே ஏறிக்கொள்ள சொன்ன அம்ருவை மறுத்தவள் ஹரிஷைப் பார்த்தாள். ‘உங்கள் பாடு! எனக்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை.’ என்பதாக ஓர் சிரிப்புடன் அமைதியாக இருந்துக்கொண்டான் அவன். அம்ருவை பின்னால் தனியே விட்டுவிட்டு, தான் மட்டும் அவனருகே அமர்வது அதிகப்படியாக தெரிந்ததால், “நானும் பின்னாடி உன் கூடவே உட்காருறேன் அம்ரு.” என்று பின்னால் அமர்ந்துவிட்டு ஹரிஷைப் பார்க்க, அவள் பார்வைக்காகவே காத்திருந்தாற் போல் ஒற்றைக் கண் சிமிட்டி அவளைச் சிவக்க வைத்துவிட்டு மகிழுந்தை எடுத்தான். ஸ்வேதா ஓசூர் அருகே இருக்கும் கிருஷ்ணகிரியில் உள்ள அனுமன் தீர்த்தம் செல்ல வேண்டும் என்று விரும்பியதால், விரைவாகக் கோவில் சென்று அனுமனைத் தரிசித்தனர். அம்ரு ஏனோ சொல்ல தெரியாத உணர்வில் அந்த அஞ்சுதனைப் பார்த்திருந்தாள். “அம்ரு, கிளம்பலாம் டைமாச்சு!” என்ற ஹரிஷ் ஸ்வேதாவின் காதில் கிசுகிசுத்தான். “நான் அனுமன் பக்தனில்ல பேபி? இ...