Skip to main content

Posts

Showing posts with the label ஆயர்பாடியில் கண்ணனில்லையோ
Welcome to ShriVijay Writings🎉 - a world of suspense, love, romance, family bonds, thrilling crime, friendship, mystery, emotions, adventure, revenge and twists & turns. Dive in and enjoy every twist! 📖✨

ஆயர்பாடியில் கண்ணனில்லையோ -2.

அத்தியாயம் 2 ப்ரித்வியின் முகத்தில் வியர்வைத் துளிகள் மினுமினுத்தன. தாங்கவியலா அழுத்தத்தில் தொண்டைக்குழி ஏறி இறங்கியது. தலையை அழுந்தக் கோதியபடி கண்கள் மூடி அமர்ந்துவிட்டான். மியாவைப் போல் யமுனாவும் திருமணமே வேண்டாம் என்று இருக்கிறாள் போலும் என்றே நினைத்திருந்தான் ப்ரித்வி. தன்னிடம் குறை என்று எதுவுமில்லை. ஆக இத்தனை வருடங்கள் கழித்து திருமணத்திற்கு சம்மதித்திருக்கும் மியாவைப் போல் யமுனாவும் மனம் மாறிவிடுவாள் என்று கணித்துவிட்டான். "ப்ரித்வி! ப்ரித்வி! என்னடா பண்ணுது?" மாரடைப்பு வந்தவன் போல் அமர்ந்திருந்தவனை உலுக்கினாள் மியா. யமுனாவிற்கு இன்னமும் திருமணமாகவில்லை என்று இவன் உள்மனம் எப்படி அத்தனை நிச்சயமாய் நம்பியது? அதனாலல்லவோ அவளிடம் தன் காதலை வெளிப்படுத்தியிருந்தான்!  "டேய் ப்ரித்வி!" "யாரு அவரு?" "நீ வீட்டுக்கு வா! நான் எல்லாம் சொல்றேன்." "பேரென்ன?" "ப்ச் ப்ரித்வி!" "மிஸஸ் யமுனா..?" 'பெயரை முழுமையாக்கு' என்று அடத்துடன் பார்த்தான். சொல்லாமல் இடத்தை விட்டு நகர மாட்டானென புரிந்த மியா சொன்னாள். "யமுனா ரா‌ஜீவ...

ஆயர்பாடியில் கண்ணனில்லையோ -1.

அத்தியாயம் 1 "ஹே ய் மியா!" தன் புதுமனைவியின் ஈரக்கூந்தலை கையிலிருந்த ஹேர் டிரையரால் உலர்த்திக் கொண்டிருந்த ரித்திஷ் அழைத்தான். "ஹ்ம்ம்…" - கூந்தலுக்கிடையே உலாவும் அவன் விரல்கள் தந்த இதத்தில் விழிமூடியிருந்த மியா! "நேத்து பார்ட்டிக்கு வந்த உன் ஃப்ரெண்ட் பத்தி சொல்றேன்னியே?" "நீதான் நேத்து ஃபுல்லா என்னை சொல்லவே விடலயே…" அசடு வழிந்தவன், "ஹேய் சரி சரி ரொம்ப ஓட்டாத! இப்ப சொல்லு கேட்கறேன்." என்றான். இருவருக்கும் பத்து நாட்கள் முன்பு திருமணம் முடிந்திருந்தது. தேனிலவுக்கு செல்லுமுன் நண்பர்கள் கேட்ட ட்ரீட் தந்துவிட வேண்டி, நேற்று வீட்டிலேயே சிறிய பார்ட்டி ஏற்பாடு செய்திருந்தனர். அதற்கு வந்திருந்த ஒரு பெண்ணைப் பற்றி தான் தற்போது தம்பதிகளுக்கிடையே பேச்சு ஓடிக்கொண்டிருக்கிறது. திருமணத்தன்றும் இவனிடம் அவளைக் குறித்து தீர்க்கமானப் பார்வையோடு ஏதோ சொன்னாள் மியா. நேற்றும் அதே போன்ற பார்வையில், "இவங்க…" என்று என்னவோ சொல்ல வந்தவளை மற்றொரு விருந்தினரின் வரவு தடை செய்திருந்தது. இப்போது அவள் இவர்களுக்கு தந்த பரிசுப் பொருள் கண்ணில்படவும், நினைவு வந்...

Popular Posts 💫

ஸ்கார்பியோ காதல் 🚗 💌

  கதையின் இணைப்புகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன🎉 கதை முன்னோட்டம்   ஹிக்கின் பாதம்ஸை அலசி விட்டு, ஐபாகோவில் ஐக்கியமாகி, பின்னர் ஊருக்கு செல்லப் பெட்டியைக் கட்டினார்கள். மகிழுந்தில் ஸ்வேதாவை முன்னே ஹரிஷின் அருகே ஏறிக்கொள்ள சொன்ன அம்ருவை மறுத்தவள் ஹரிஷைப் பார்த்தாள். ‘உங்கள் பாடு! எனக்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை.’ என்பதாக ஓர் சிரிப்புடன் அமைதியாக இருந்துக்கொண்டான் அவன். அம்ருவை பின்னால் தனியே விட்டுவிட்டு, தான் மட்டும் அவனருகே அமர்வது அதிகப்படியாக தெரிந்ததால், “நானும் பின்னாடி உன் கூடவே உட்காருறேன் அம்ரு.” என்று பின்னால் அமர்ந்துவிட்டு ஹரிஷைப் பார்க்க, அவள் பார்வைக்காகவே காத்திருந்தாற் போல் ஒற்றைக் கண் சிமிட்டி அவளைச் சிவக்க வைத்துவிட்டு மகிழுந்தை எடுத்தான். ஸ்வேதா ஓசூர் அருகே இருக்கும் கிருஷ்ணகிரியில் உள்ள அனுமன் தீர்த்தம் செல்ல வேண்டும் என்று விரும்பியதால், விரைவாகக் கோவில் சென்று அனுமனைத் தரிசித்தனர். அம்ரு ஏனோ சொல்ல தெரியாத உணர்வில் அந்த அஞ்சுதனைப் பார்த்திருந்தாள். “அம்ரு, கிளம்பலாம் டைமாச்சு!” என்ற ஹரிஷ் ஸ்வேதாவின் காதில் கிசுகிசுத்தான். “நான் அனுமன் பக்தனில்ல பேபி? இ...

சீதையின் பூக்காடு🌻🌺 - தொகுப்பு.

  கதையின் இணைப்புகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன🔗🔗  கதை முன்னோட்டம். பொறுமை இழந்தவன், "ஹலோ! கேன் யூ ப்ளீஸ் டெல் மீ, வாட்'ஸ் யுவர் ப்ராப்ளம்?" எனக் கேட்டான். "யாரோ ப்ளே பண்றா. நேக்கு கொஞ்சம் முன்னாடி கால் வந்தது. ஊருக்கு கிளம்பின எங்க பாட்டிக்கு பாதி வழியிலேயே திடீர்னு ஃபிட்ஸ் வந்துட்டதாகவும், இப்போதைக்கு பக்கத்துல இருக்க அவா ஆத்துல வச்சு ஃபர்ஸ்ட் எய்ட் பண்ணிருக்கறதாகவும், உடனே வந்தா ஹாஸ்பிடல் அழைச்சிண்டு போகலாம்னும் சொல்லி இந்த அட்ரஸ்க்கு வர சொன்னா." "ஓ!" "ஆனா, இப்ப அம்மா பேசறத பார்த்தா எல்லாரும் நல்லபடியா ஊருக்கு போய்ட்டா போலயே... அப்ப நேக்கு கால் பண்ணது யாரா இருக்கும்?" "எனக்கு கால் பண்ணவன் தான் உங்களுக்கும் பண்ணிருக்கணும். ஆமா... வீட்ல உள்ளவங்க ஊருக்கு கிளம்பி எவ்ளோ நேரம் ஆச்சு?" "மூணரை மணி நேரம் இருக்கும். ஏன் கேக்கறேள்?" "நீங்க இங்க வர்றதுக்கு மினிமம் ஆஃப் ஆன் ஆர்-னு வச்சிக்கிட்டா கூட… ரொம்ப தூரம் இல்லனா, கிளம்பி மூணு மணி நேரம் ஆனவங்க ஊருக்கே போய் சேர்ந்திருப்பாங்களே… இங்க பக்கத்துல எப்டி இவ்ளோ நேரம் இருப்பாங்...

சீதையின் பூக்காடு - 1

  அத்தியாயம் 1 வெள்ளிக்கிழமை! மாலை நான்கு மணி அளவில் மழை வரும் போல் வானம் கருமையைப் பூசிக் கொண்டிருந்தது. அந்த பதிப்பகத்தில் தனது புத்தகத்தை வெளியிடுவது பற்றி பேசிக்கொண்டிருந்தாள் ஆரவி. ஆரவி! இருபத்துமூன்று வயது. பிபிஎம் படித்தவள். படித்ததற்கேற்ப ஓர் சிறிய நிறுவனத்தில் வேலை செய்தவள். ஆம்! செய்தவள். மேற்கொண்டு படிக்க விரும்பாமலும், வேலை செய்த நிறுவனம் வேறு கைக்கு மாறியதாலும் தற்போது வேறு வேலைக்கு முயற்சித்துக் கொண்டிருக்கிறாள். தனக்கு விருப்பமான எழுத்துலகில் அடியெடுத்து வைத்தவள் ஆறு நாவல்களும், இருபது சிறுகதைகளும் எழுதியுள்ளாள். அவள் எழுதி பத்திரிக்கைகளில் பிரசுரமானதில் ஒன்பது சிறுகதைகள் பரிசுகள் பெற்றவை! தரமான கதைகளை எழுதி அனுராதா ரமணன், சிவசங்கரி போன்ற எழுத்தாளர்களைப் போல் தானும் புகழ்பெற வேண்டும் என்பதே ஆரவியின் குறிக்கோள்! இந்த பதிப்பகமே இவள் எழுதிய நான்கு நாவல்களை வெளியிட்டுள்ளது. அதில் இரண்டு மறுபதிப்பிற்கு சென்றுள்ளன. தற்போதும் இவளெழுதிய 'சீதையின் பூக்காடு' என்ற புத்தகம் மறுபதிப்பிற்கு செல்லவிருக்கிறது. அதற்கு பதிப்பகத்தாரின் பாராட்டைப் பெற்றுக்கொண்டும், மற்றுமொரு கதைய...