வேலையில் இருந்து ஓய்வு பெற்ற பின், மகனோடு வந்துவிட்டேன். பேத்திகள் இருவரோடும் என் மீத வாழ்க்கை ஓர் நதியைப் போல அமைதியாகவே செல்கிறது. இன்று அருகிலுள்ள பூங்கா வரை சென்று வருகிறேனென, மருமகளிடம் கூறி விட்டு... காலணிகளை அணிந்து கொண்டு நடக்க ஆரம்பித்தேன். பாழாய்ப் போன மூட்டு வலி இருபதடி தூரம் கூட நடக்க விடவில்லை. பேருந்து நிறுத்தத்திற்கு எதிர்புற சாலையைக் கடந்தால் பூங்கா வரும். எனவே, பேருந்து நிறுத்தத்தில் இருந்த பெஞ்சில் அமர்ந்து செல்ல எண்ணி போய் அமர்ந்தேன். பேருந்து வருவதும், காத்திருந்த மனிதர்கள் அவசர கதியில் சென்று தொற்றிக் கொள்வதும், மீண்டும் பேருந்து நிறுத்தம் ஆட்களால் நிறைவதுமாய்... அந்த காலை நேரம் பரபரப்பாய் இருந்தது. அனைத்து நிகழ்வுகளையும் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்த என் விழிகளின் பேச்சைக் கேட்காத மனம்... பிடிவாதமாய் என் கடந்த காலத்திற்குள் சென்று விழுந்தது. ஆறு வருடங்களுக்கு முன்பு வரை… இதோ என் முன்னால் ஓடிக்கொண்டிருக்கும் மனிதர்களைப் போலவே நானும், காலை அலாரத்தின் அழைப்பில் எழுந்து… வீட்டில் உள்ள அனைவருக்கும் வேண்டிய தேவைகளை முடித்து, நிற்க நேரமில்லாமல் அவசர...
கதையின் இணைப்புகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன🎉 கதை முன்னோட்டம் ஹிக்கின் பாதம்ஸை அலசி விட்டு, ஐபாகோவில் ஐக்கியமாகி, பின்னர் ஊருக்கு செல்லப் பெட்டியைக் கட்டினார்கள். மகிழுந்தில் ஸ்வேதாவை முன்னே ஹரிஷின் அருகே ஏறிக்கொள்ள சொன்ன அம்ருவை மறுத்தவள் ஹரிஷைப் பார்த்தாள். ‘உங்கள் பாடு! எனக்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை.’ என்பதாக ஓர் சிரிப்புடன் அமைதியாக இருந்துக்கொண்டான் அவன். அம்ருவை பின்னால் தனியே விட்டுவிட்டு, தான் மட்டும் அவனருகே அமர்வது அதிகப்படியாக தெரிந்ததால், “நானும் பின்னாடி உன் கூடவே உட்காருறேன் அம்ரு.” என்று பின்னால் அமர்ந்துவிட்டு ஹரிஷைப் பார்க்க, அவள் பார்வைக்காகவே காத்திருந்தாற் போல் ஒற்றைக் கண் சிமிட்டி அவளைச் சிவக்க வைத்துவிட்டு மகிழுந்தை எடுத்தான். ஸ்வேதா ஓசூர் அருகே இருக்கும் கிருஷ்ணகிரியில் உள்ள அனுமன் தீர்த்தம் செல்ல வேண்டும் என்று விரும்பியதால், விரைவாகக் கோவில் சென்று அனுமனைத் தரிசித்தனர். அம்ரு ஏனோ சொல்ல தெரியாத உணர்வில் அந்த அஞ்சுதனைப் பார்த்திருந்தாள். “அம்ரு, கிளம்பலாம் டைமாச்சு!” என்ற ஹரிஷ் ஸ்வேதாவின் காதில் கிசுகிசுத்தான். “நான் அனுமன் பக்தனில்ல பேபி? இ...