அத்தியாயம் 29 செவ்வாய் கிழமை காலை, அனிதா தன் தேடுதலின் முதல்கட்டமாக புத்தகப் பதிப்பகத்தாரின் அலுவலகத்தில் விசாரிக்க, அவர்கள் பரமானந்தத்திடம் சொன்னதையே இவளிடமும் கூறினர். அந்த அலுவலகம் ஒரு ஒடுங்கிய தெருவில் இருந்தாலும், தெருவின் ஆரம்பத்தில் இருந்ததால் அருகில் தேநீர் கடை, ஆட்டோ நிறுத்தம், சாலையோர கடைகள் என்று அந்த இடமே திருவிழா கொண்டதைப் போல் ஜேஜே என்றிருந்தது. முதலில் தேநீர் கடையில் ஆரவியின் புகைப்படத்தைக் காட்டி, அவளின் இரு சக்கர வாகனத்தையும் அடையாளமாகக் கூறி விசாரித்தாள். எப்போதேனும் வந்து போகும் ஆரவியை அங்கு யாருக்கும் தெரிந்திருக்கவில்லை. ஆட்டோ நிறுத்தத்திலும் அவ்வாறே பதில் கிடைத்தது. சற்றுநேரம் யோசித்துவிட்டு, சாலையோர கடைகளில் ஒவ்வொன்றாகக் கேட்டுக் கேட்டு களைத்தாள். ஆரவி காணாமல் போன அன்று மாலையும், மறுநாளும் மழையின் காரணமாக யாரும் கடை போட்டிருக்கவில்லை. எனவே யாருக்கும் எந்த விவரமும் தெரிந்திருக்கவில்லை. நம்பிக்கையை விடாமல் மீண்டும் சில கடைகளில் விசாரித்தாள். அதிர்ஷ்டவசமாக ஒரு கடை நபரின் மகன், அனிதாவின் சிக்கலான நூல்கண்டின் முனையைப் பிரித்துக் கொடுத்தான். அது என்னவெ...
கதையின் இணைப்புகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன🎉 கதை முன்னோட்டம் ஹிக்கின் பாதம்ஸை அலசி விட்டு, ஐபாகோவில் ஐக்கியமாகி, பின்னர் ஊருக்கு செல்லப் பெட்டியைக் கட்டினார்கள். மகிழுந்தில் ஸ்வேதாவை முன்னே ஹரிஷின் அருகே ஏறிக்கொள்ள சொன்ன அம்ருவை மறுத்தவள் ஹரிஷைப் பார்த்தாள். ‘உங்கள் பாடு! எனக்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை.’ என்பதாக ஓர் சிரிப்புடன் அமைதியாக இருந்துக்கொண்டான் அவன். அம்ருவை பின்னால் தனியே விட்டுவிட்டு, தான் மட்டும் அவனருகே அமர்வது அதிகப்படியாக தெரிந்ததால், “நானும் பின்னாடி உன் கூடவே உட்காருறேன் அம்ரு.” என்று பின்னால் அமர்ந்துவிட்டு ஹரிஷைப் பார்க்க, அவள் பார்வைக்காகவே காத்திருந்தாற் போல் ஒற்றைக் கண் சிமிட்டி அவளைச் சிவக்க வைத்துவிட்டு மகிழுந்தை எடுத்தான். ஸ்வேதா ஓசூர் அருகே இருக்கும் கிருஷ்ணகிரியில் உள்ள அனுமன் தீர்த்தம் செல்ல வேண்டும் என்று விரும்பியதால், விரைவாகக் கோவில் சென்று அனுமனைத் தரிசித்தனர். அம்ரு ஏனோ சொல்ல தெரியாத உணர்வில் அந்த அஞ்சுதனைப் பார்த்திருந்தாள். “அம்ரு, கிளம்பலாம் டைமாச்சு!” என்ற ஹரிஷ் ஸ்வேதாவின் காதில் கிசுகிசுத்தான். “நான் அனுமன் பக்தனில்ல பேபி? இ...