Skip to main content

Posts

Showing posts from November, 2025
Welcome to ShriVijay Writings🎉 - a world of suspense, love, romance, family bonds, thrilling crime, friendship, mystery, emotions, adventure, revenge and twists & turns. Dive in and enjoy every twist! 📖✨

சீதையின் பூக்காடு - 23

அத்தியாயம் 23 இந்த ஒரே ஒருமுறை தனக்காக தன் தம்பியை மன்னித்து விடுமாறும் இனி அவனோடான அவள் வாழ்க்கையில் அவன் என்ன தவறிழைத்தாலும் தக்க தண்டனை கொடுத்துக் கொள்ளுமாறும் சீதா ஆரவியிடம் மன்றாடியிருந்தாள். நீண்ட நேர கெஞ்சலுக்கு பின் சரியென்றிருந்தாள் ஆரவி. இங்கே இவள் வரவில்லை என்றால் சீதாவைக் காண முடிந்திருக்காதல்லவா? அந்த ஒரு காரணத்திற்காகவே விபுவை மன்னிக்க ஒத்துக்கொண்டாள்.  இருப்பினும், அவனிடம் வீம்பிற்காகவேணும் முகத்தைத் திருப்பிக்கொண்டே திரிந்தாள். அவனும் சளைக்காமல் காதல் செய்துகொண்டே இருந்தான். சீதாவும் இருவரின் ஊடல்களை ரசித்தவாறே சுற்றி வந்துகொண்டிருந்தாள். இப்போது அவ்வீட்டில் மூவரும் ஆளுக்கொரு தூணைப் பற்றி கொண்டு நின்றிருந்தனர். விழியோரமாய் ஒரு நீர் துளி வழியுதே என் காதலி அதன் ஆழங்கள் நீ உணர்ந்தால் போதும் போதும் போதும்...  விபுநந்தனின் உதவியால், ப்ளேயரின் மூலம் ஏற்கனவே தன்னுள் பதித்து வைத்திருந்த காதல் பாடல்களை ஒவ்வொன்றாய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பிக் கொண்டிருந்தது, அந்த குறுந்தகடு.  அவன் மேல் இருந்த கடுப்பைத் தொலைக்காட்சியின் மேல் காட்டியவள், அதை அணைத்துவிட்டு மீண்டும் சென...

சீதையின் பூக்காடு - 21

அத்தியாயம் 21 சீதா அந்த வார இறுதியில் செலின் மேடமை சந்திக்க சென்று வந்தாள். இன்னும் குழந்தையைக் காணாமல் அவரும் அஷ்மியும் மிகுந்த வருத்தத்திலிருந்தனர். முடிந்தவரை ஆறுதலாக பேசிவிட்டு வந்தாள். மாலையில் ஷாப்பிங் சென்று வரலாம் என்று தான்யா வற்புறுத்த, பயிற்சி காலம் ஆரம்பித்தது முதல் எங்கும் வெளியே செல்லாத காரணத்தால் சீதாவும் இன்று தங்கையோடு கடைவீதி வர சம்மதித்தாள். அவர்கள் சென்ற மால் அந்த குழந்தைகள் காப்பகத்திற்கு எதிர்புறம் இருந்தது. வழக்கமாகவே சீதாவின் குடும்பத்தினர் அங்கே தான் பர்சேஸிங்கிற்கு வருவது! ஆனால் ஒருவருமே அந்த இல்லத்தை இதுவரை கவனித்ததில்லை. அன்று பார்த்து மிகச் சிறியதாக தணிந்திருந்த அந்த இல்லத்தின் பெயர்பலகை சீதாவின் கண்களில் பட்டுத் தொலைத்தது. "வேற எதுவும் வாங்கப் போறியாக்கா? எனக்கு இன்னும் கொஞ்சம் வாங்கணும். இன்னர்ஸ் செக்ஷன் போகணும்." - தான்யா. "சரி வா! ஐ வன்னா பை தர் ட்டூ." "நீ வாங்கிருக்க அஞ்சு செட்ல அந்த ஆலிவ் க்ரீன் டாப் அண்ட் மல்ட்டி கலர் ஃப்ளவர்ஸ் லாங் ஸ்கர்ட் தான் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்குக்கா." "எனக்கு வைட் டாப் அண்ட் பேலஸோ. ப்ளூ ...

சீதையின் பூக்காடு - 19

அத்தியாயம் 19 பொதுவாக மனித உயிர்களை கையாள தகுதி உள்ளவர்கள் மட்டுமே வேண்டும் என்பதால், மருத்துவப் படிப்பில் இறுதி ஆண்டில் பெருமளவு மாணவர்களை வடிகட்டி விடுவார்கள். எனவே இறுதி ஆண்டுத் தேர்வு மிகவும் கடினமாக இருக்கும். அதில் சீதா இரண்டு தேர்வுகளில் பல்கலைக்கழகத்தில் முதலாவதாக தேர்ச்சி பெற்றிருந்தாள். எனவே இரட்டிப்பு மகிழ்ச்சியோடு வழக்கம் போல் செலின் மேடமை சந்தித்து தன் மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொண்டாள்.  பள்ளியில் நடந்த சம்பவத்திற்கு பிறகு இருவரும் அடிக்கடி சந்தித்து பேசிக்கொண்டார்கள் அல்லவா? ஏனோ இந்த முறை அவரை சந்திக்கையில் அவரின் உளநிலைக் குறித்து சீதாவின் மனதில் சிறு சந்தேகம் நெருடியது.  வழக்கம் போல் தன் தந்தையுடன் சந்திக்க வந்திருந்தவளை இன்முகத்துடன் வரவேற்றார் செலின்.  "வாங்க சர்! சீதாம்மா, ஏதோ ஹேப்பி மெசேஜ் கொண்டு வந்திருக்கா போலவே? சம்திங் லைட் ஸீம்ஸ் ஆன் ஹர் ஃபேஸ்!" என்று சீதாவின் விரிந்த புன்னகை முகத்தைப் பார்த்தவாறே கூறினார். "ஆமா மேடம்! உங்க சீதாம்மா டாக்டர் ஆகிட்டா. ரெண்டு சப்ஜெக்ட்ல யுனிவர்சிட்டி ஃபர்ஸ்ட்!" "இஸ் தட் சோ? சந்தோஷம்! சந்தோஷம்! என் ஸ்டூடண்ட் ...

Popular Posts 💫

ஸ்கார்பியோ காதல் 🚗 💌

  கதையின் இணைப்புகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன🎉 கதை முன்னோட்டம்   ஹிக்கின் பாதம்ஸை அலசி விட்டு, ஐபாகோவில் ஐக்கியமாகி, பின்னர் ஊருக்கு செல்லப் பெட்டியைக் கட்டினார்கள். மகிழுந்தில் ஸ்வேதாவை முன்னே ஹரிஷின் அருகே ஏறிக்கொள்ள சொன்ன அம்ருவை மறுத்தவள் ஹரிஷைப் பார்த்தாள். ‘உங்கள் பாடு! எனக்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை.’ என்பதாக ஓர் சிரிப்புடன் அமைதியாக இருந்துக்கொண்டான் அவன். அம்ருவை பின்னால் தனியே விட்டுவிட்டு, தான் மட்டும் அவனருகே அமர்வது அதிகப்படியாக தெரிந்ததால், “நானும் பின்னாடி உன் கூடவே உட்காருறேன் அம்ரு.” என்று பின்னால் அமர்ந்துவிட்டு ஹரிஷைப் பார்க்க, அவள் பார்வைக்காகவே காத்திருந்தாற் போல் ஒற்றைக் கண் சிமிட்டி அவளைச் சிவக்க வைத்துவிட்டு மகிழுந்தை எடுத்தான். ஸ்வேதா ஓசூர் அருகே இருக்கும் கிருஷ்ணகிரியில் உள்ள அனுமன் தீர்த்தம் செல்ல வேண்டும் என்று விரும்பியதால், விரைவாகக் கோவில் சென்று அனுமனைத் தரிசித்தனர். அம்ரு ஏனோ சொல்ல தெரியாத உணர்வில் அந்த அஞ்சுதனைப் பார்த்திருந்தாள். “அம்ரு, கிளம்பலாம் டைமாச்சு!” என்ற ஹரிஷ் ஸ்வேதாவின் காதில் கிசுகிசுத்தான். “நான் அனுமன் பக்தனில்ல பேபி? இ...

சீதையின் பூக்காடு🌻🌺 - தொகுப்பு.

  கதையின் இணைப்புகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன🔗🔗  கதை முன்னோட்டம். பொறுமை இழந்தவன், "ஹலோ! கேன் யூ ப்ளீஸ் டெல் மீ, வாட்'ஸ் யுவர் ப்ராப்ளம்?" எனக் கேட்டான். "யாரோ ப்ளே பண்றா. நேக்கு கொஞ்சம் முன்னாடி கால் வந்தது. ஊருக்கு கிளம்பின எங்க பாட்டிக்கு பாதி வழியிலேயே திடீர்னு ஃபிட்ஸ் வந்துட்டதாகவும், இப்போதைக்கு பக்கத்துல இருக்க அவா ஆத்துல வச்சு ஃபர்ஸ்ட் எய்ட் பண்ணிருக்கறதாகவும், உடனே வந்தா ஹாஸ்பிடல் அழைச்சிண்டு போகலாம்னும் சொல்லி இந்த அட்ரஸ்க்கு வர சொன்னா." "ஓ!" "ஆனா, இப்ப அம்மா பேசறத பார்த்தா எல்லாரும் நல்லபடியா ஊருக்கு போய்ட்டா போலயே... அப்ப நேக்கு கால் பண்ணது யாரா இருக்கும்?" "எனக்கு கால் பண்ணவன் தான் உங்களுக்கும் பண்ணிருக்கணும். ஆமா... வீட்ல உள்ளவங்க ஊருக்கு கிளம்பி எவ்ளோ நேரம் ஆச்சு?" "மூணரை மணி நேரம் இருக்கும். ஏன் கேக்கறேள்?" "நீங்க இங்க வர்றதுக்கு மினிமம் ஆஃப் ஆன் ஆர்-னு வச்சிக்கிட்டா கூட… ரொம்ப தூரம் இல்லனா, கிளம்பி மூணு மணி நேரம் ஆனவங்க ஊருக்கே போய் சேர்ந்திருப்பாங்களே… இங்க பக்கத்துல எப்டி இவ்ளோ நேரம் இருப்பாங்...

சீதையின் பூக்காடு - 1

  அத்தியாயம் 1 வெள்ளிக்கிழமை! மாலை நான்கு மணி அளவில் மழை வரும் போல் வானம் கருமையைப் பூசிக் கொண்டிருந்தது. அந்த பதிப்பகத்தில் தனது புத்தகத்தை வெளியிடுவது பற்றி பேசிக்கொண்டிருந்தாள் ஆரவி. ஆரவி! இருபத்துமூன்று வயது. பிபிஎம் படித்தவள். படித்ததற்கேற்ப ஓர் சிறிய நிறுவனத்தில் வேலை செய்தவள். ஆம்! செய்தவள். மேற்கொண்டு படிக்க விரும்பாமலும், வேலை செய்த நிறுவனம் வேறு கைக்கு மாறியதாலும் தற்போது வேறு வேலைக்கு முயற்சித்துக் கொண்டிருக்கிறாள். தனக்கு விருப்பமான எழுத்துலகில் அடியெடுத்து வைத்தவள் ஆறு நாவல்களும், இருபது சிறுகதைகளும் எழுதியுள்ளாள். அவள் எழுதி பத்திரிக்கைகளில் பிரசுரமானதில் ஒன்பது சிறுகதைகள் பரிசுகள் பெற்றவை! தரமான கதைகளை எழுதி அனுராதா ரமணன், சிவசங்கரி போன்ற எழுத்தாளர்களைப் போல் தானும் புகழ்பெற வேண்டும் என்பதே ஆரவியின் குறிக்கோள்! இந்த பதிப்பகமே இவள் எழுதிய நான்கு நாவல்களை வெளியிட்டுள்ளது. அதில் இரண்டு மறுபதிப்பிற்கு சென்றுள்ளன. தற்போதும் இவளெழுதிய 'சீதையின் பூக்காடு' என்ற புத்தகம் மறுபதிப்பிற்கு செல்லவிருக்கிறது. அதற்கு பதிப்பகத்தாரின் பாராட்டைப் பெற்றுக்கொண்டும், மற்றுமொரு கதைய...