அத்தியாயம் 30 அம்ருதாவை அடித்தப் பின்னும் கோபம் குறையாமல் மறுபக்கம் திரும்பி, இடையில் கை வைத்து, கீழே கிடந்த கல்லை உதைத்துத் தள்ளி தன் ஆத்திரத்தை வெளிப்படுத்தினான் அஸ்வத். தேவாவுடன் அவர்களைப் பார்த்தவாறு வந்த ஹரிஷ், “என்ன செஞ்ச அம்மு?” எனக் கேட்டவன், பதிலை எதிர்பாராமல் அஸ்வத்தைத் தன்புறம் திருப்பி, “அவ என்ன செஞ்சிருந்தாலும் அவளை அடிக்கற உரிமையை உனக்கு யார் கொடுத்தது?” என்று முஷ்டியை மடக்கி அவன் முகத்தில் குத்த போக, “அண்ணா ப்ளீஸ்…” அவனைத் தடுத்து இருவருக்கும் இடையே வந்து நின்றாள் அம்ருதா. “எல்லாம் நீ கொடுக்கற இடம் அம்மு! யாரோ எவனோ எப்டி போனா உனக்கென்ன?” என்று பல்லைக் கடிக்கையில், அம்ரு மீது அஸ்வத்தின் பார்வை மாற்றத்தைக் கண்டுவிட்டு தன்னை நிலைப்படுத்தினான் ஹரிஷ். ஹரிஷ் அம்ருதாவின் அருகே இருக்க, அதிலும் அவனின் அம்மு என்ற அழைப்பு வழக்கம்போல அஸ்வத்தின் உளநிலையில் மாற்றத்தை ஏற்படுத்தியிருந்தது. இது அதற்கான நேரமல்ல! அஸ்வத்தை உடனடியாக அமைதிபடுத்தியாக வேண்டும்! அதனால் தன் கோபத்தைக் கட்டுப்படுத்தினான் ஹரிஷ். என்னதான் காதலை வெளிப்படுத்தியிருந்தாலும், சற்றுமுன் நிகழ்ந்த அந்நிகழ்வினை அஸ...
கதையின் இணைப்புகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன🎉 கதை முன்னோட்டம் ஹிக்கின் பாதம்ஸை அலசி விட்டு, ஐபாகோவில் ஐக்கியமாகி, பின்னர் ஊருக்கு செல்லப் பெட்டியைக் கட்டினார்கள். மகிழுந்தில் ஸ்வேதாவை முன்னே ஹரிஷின் அருகே ஏறிக்கொள்ள சொன்ன அம்ருவை மறுத்தவள் ஹரிஷைப் பார்த்தாள். ‘உங்கள் பாடு! எனக்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை.’ என்பதாக ஓர் சிரிப்புடன் அமைதியாக இருந்துக்கொண்டான் அவன். அம்ருவை பின்னால் தனியே விட்டுவிட்டு, தான் மட்டும் அவனருகே அமர்வது அதிகப்படியாக தெரிந்ததால், “நானும் பின்னாடி உன் கூடவே உட்காருறேன் அம்ரு.” என்று பின்னால் அமர்ந்துவிட்டு ஹரிஷைப் பார்க்க, அவள் பார்வைக்காகவே காத்திருந்தாற் போல் ஒற்றைக் கண் சிமிட்டி அவளைச் சிவக்க வைத்துவிட்டு மகிழுந்தை எடுத்தான். ஸ்வேதா ஓசூர் அருகே இருக்கும் கிருஷ்ணகிரியில் உள்ள அனுமன் தீர்த்தம் செல்ல வேண்டும் என்று விரும்பியதால், விரைவாகக் கோவில் சென்று அனுமனைத் தரிசித்தனர். அம்ரு ஏனோ சொல்ல தெரியாத உணர்வில் அந்த அஞ்சுதனைப் பார்த்திருந்தாள். “அம்ரு, கிளம்பலாம் டைமாச்சு!” என்ற ஹரிஷ் ஸ்வேதாவின் காதில் கிசுகிசுத்தான். “நான் அனுமன் பக்தனில்ல பேபி? இ...