அத்தியாயம் 16.2 "ஓய் தான்யாக்கா! வந்த நாலு நாளா நானும் பார்க்கறேன். ஒண்ணு அந்த ஐ ஃபோனை நோண்டிட்டு இருக்க. இல்ல லேப்புக்குள்ள தலையை விட்டுட்டு இருக்க. அப்டி என்ன பிஸினஸ் டீல் பண்ணிட்டு இருக்க? மச்சான் அதுக்குள்ள உன் கையில மேனேஜ்மென்ட்'அ மொத்தமா ஒப்படைச்சிட்டாரா?" "நீ வேற வயித்தெரிச்சலைக் கிளப்பாம போடா. அப்டியே உங்க மச்சான் என்னை நம்பி குடுத்துட்டாலும்... எனக்கு இருக்கற ஒரே என்டர்டெயின்மென்ட் இது தான்." என்று அலைபேசியைக் காட்டினாள். "ரொம்ப அலுத்துக்கற போலயே?" "ஹான்! இங்கேயும் என்னைக் கண்டுக்காம எல்லாரும் அவரவர் வேலையைப் பார்க்க போயிடறாங்க. நான் வேற என்ன பண்றதாம்?" "ஏன் அம்மா கூட ஸ்கூலுக்கு போகலாம். அப்பா கூட ஹோட்டல் போயிருக்கலாம். இல்ல அண்ணியோட ரிசார்ட்டாவது போயிருக்கலாம்." "அதுக்கு நான் இங்க இருந்து இந்த ஸ்டோரீஸே படிச்சிடுவேன்டா நந்தா." "படிக்கற காலத்துல தான் கைட்குள்ள (guide) கதை புக்கை ஒளிச்சு வச்சு படிச்சு, அம்மாகிட்ட அடி வாங்குவ. கல்யாணம் ஆனதுக்கப்புறம் கூட திருந்தலயா நீ?" "திருந்துறதுக்கு நான் என்ன குடி...
கதையின் இணைப்புகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன🎉 கதை முன்னோட்டம் ஹிக்கின் பாதம்ஸை அலசி விட்டு, ஐபாகோவில் ஐக்கியமாகி, பின்னர் ஊருக்கு செல்லப் பெட்டியைக் கட்டினார்கள். மகிழுந்தில் ஸ்வேதாவை முன்னே ஹரிஷின் அருகே ஏறிக்கொள்ள சொன்ன அம்ருவை மறுத்தவள் ஹரிஷைப் பார்த்தாள். ‘உங்கள் பாடு! எனக்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை.’ என்பதாக ஓர் சிரிப்புடன் அமைதியாக இருந்துக்கொண்டான் அவன். அம்ருவை பின்னால் தனியே விட்டுவிட்டு, தான் மட்டும் அவனருகே அமர்வது அதிகப்படியாக தெரிந்ததால், “நானும் பின்னாடி உன் கூடவே உட்காருறேன் அம்ரு.” என்று பின்னால் அமர்ந்துவிட்டு ஹரிஷைப் பார்க்க, அவள் பார்வைக்காகவே காத்திருந்தாற் போல் ஒற்றைக் கண் சிமிட்டி அவளைச் சிவக்க வைத்துவிட்டு மகிழுந்தை எடுத்தான். ஸ்வேதா ஓசூர் அருகே இருக்கும் கிருஷ்ணகிரியில் உள்ள அனுமன் தீர்த்தம் செல்ல வேண்டும் என்று விரும்பியதால், விரைவாகக் கோவில் சென்று அனுமனைத் தரிசித்தனர். அம்ரு ஏனோ சொல்ல தெரியாத உணர்வில் அந்த அஞ்சுதனைப் பார்த்திருந்தாள். “அம்ரு, கிளம்பலாம் டைமாச்சு!” என்ற ஹரிஷ் ஸ்வேதாவின் காதில் கிசுகிசுத்தான். “நான் அனுமன் பக்தனில்ல பேபி? இ...