இறுதி அத்தியாயம் அம்ருதா தன் பயிற்சி காலத்தை நிறைவு செய்துவிட்டு ஒரு தனியார் மருத்துவமனையில் பணிபுரிந்து கொண்டிருந்தாள். அதே மருத்துவமனையில், “ஹாஸ்பிடல் வந்துட்டேன் ஹரிஷ்! எந்தப் பக்கம்?” “அஸ்வத்!” திரும்பியவன் தன்னை நோக்கி கையசைத்துக்கொண்டு வரும் ஹரிஷைக் கண்டுவிட்டு, அலைபேசியை அணைத்தபடி அவனோடு நடந்தான். ஹரிஷ் நிறைய பயந்திருந்தான். அவன் முகமே பதற்றத்தில் குளித்திருந்தது. அஸ்வத் ஆறுதலாக அவன் தோள் தட்டினான். “நீங்களே ஒரு டாக்டர். உங்க தங்கச்சியை எமோஷனல் ஆகக்கூடாது சொல்லுவீங்க! இப்போ நீங்களே பயந்தா எப்டி?” “பொண்டாட்டி விஷயத்துல எல்லாரும் ஸீரோ’ங்க! நிஜமா என்னால இந்த ஸ்ட்ரெஸ்’அ தாங்க முடியல அஸ்வத். ஆல்மோஸ்ட் நாலு மணி நேரம் ஆகிடுச்சு. நான் ஒரு பேஷண்ட் கிட்ட பேசி அனுப்பிட்டு இப்போதான் வந்தேன். இல்லைன்னா நானும் உள்ளே போயிருப்பேன்.” “நல்லவேளை போகல! அங்கே போய் அவங்க வலியைப் பார்த்துட்டு அழுதுருப்பீங்க.” பேசியபடி அவ்வறை பக்கம் வந்திருந்தனர். அங்கே நடராஜன், அம்பிகா, ஸ்வேதாவின் அம்மா என அனைவரும் இருந்தனர். அதே மருத்துவமனையில் பணிபுரியும் அம்ருதாவிற்கு அன்று ஓர் அறுவைச் சிகிச்சை பணி இருந்...
கதையின் இணைப்புகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன🎉 கதை முன்னோட்டம் ஹிக்கின் பாதம்ஸை அலசி விட்டு, ஐபாகோவில் ஐக்கியமாகி, பின்னர் ஊருக்கு செல்லப் பெட்டியைக் கட்டினார்கள். மகிழுந்தில் ஸ்வேதாவை முன்னே ஹரிஷின் அருகே ஏறிக்கொள்ள சொன்ன அம்ருவை மறுத்தவள் ஹரிஷைப் பார்த்தாள். ‘உங்கள் பாடு! எனக்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை.’ என்பதாக ஓர் சிரிப்புடன் அமைதியாக இருந்துக்கொண்டான் அவன். அம்ருவை பின்னால் தனியே விட்டுவிட்டு, தான் மட்டும் அவனருகே அமர்வது அதிகப்படியாக தெரிந்ததால், “நானும் பின்னாடி உன் கூடவே உட்காருறேன் அம்ரு.” என்று பின்னால் அமர்ந்துவிட்டு ஹரிஷைப் பார்க்க, அவள் பார்வைக்காகவே காத்திருந்தாற் போல் ஒற்றைக் கண் சிமிட்டி அவளைச் சிவக்க வைத்துவிட்டு மகிழுந்தை எடுத்தான். ஸ்வேதா ஓசூர் அருகே இருக்கும் கிருஷ்ணகிரியில் உள்ள அனுமன் தீர்த்தம் செல்ல வேண்டும் என்று விரும்பியதால், விரைவாகக் கோவில் சென்று அனுமனைத் தரிசித்தனர். அம்ரு ஏனோ சொல்ல தெரியாத உணர்வில் அந்த அஞ்சுதனைப் பார்த்திருந்தாள். “அம்ரு, கிளம்பலாம் டைமாச்சு!” என்ற ஹரிஷ் ஸ்வேதாவின் காதில் கிசுகிசுத்தான். “நான் அனுமன் பக்தனில்ல பேபி? இ...